நிலச்சரிவில் சிக்கி உயிருடன் மொத்தமாக புதையுண்ட பலர்: வெளியான எண்ணிக்கை
சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிருடன் புதையுண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
18 குடியிருப்புகள் புதையுண்டு
சீனாவின் தேசிய ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 18 குடியிருப்புகள் புதையுண்டு, 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
An unknown number of villagers were buried in a landslide in China's Yunnan early Monday. Search and rescue for the missing is underway. #China pic.twitter.com/QkrTkKwViY
— China Xinhua News (@XHNews) January 22, 2024
200 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் டசின் கணக்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களை உள்ளடக்கிய அவசரகால நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் தேசிய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனான் மாகாணத்தில் நிலச்சரிவு பொதுவாக ஏற்படுவது தான் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பனியால் தூசி படிந்த உயரமான சிகரங்களால் சூழப்பட்ட கிராமப்புற பகுதியில் திங்கட்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவுகளை
மேலும் சம்பவத்தின் போது அப்பகுதியில் வெப்பநிலை -4C என இருந்துள்ளது. நிலச்சரிவுக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் உடனடியாக அளிக்கப்படவில்லை.
கடந்த சில மாதங்களாக இயற்கை பேரழிவுகளை சீனா சந்தித்து வருகிறது. செப்டம்பரில், குவாங்சியின் தெற்குப் பகுதியில் பெய்த மழையினால் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு குறைந்தது ஏழு பேர் மரணமடைந்தனர்.
தற்போது யுனான் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 47 பேர் உயிருடன் புதையுண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |