வேலையை காட்ட தொடங்கிய சீனா! ஏவுகணைகளை வீசி அதிரடி... தைவான் குற்றச்சாட்டு
சீனா தனது ராணுவப் பயிற்சியின் போது ஏவுகணைகளை வீசியதாக தைவான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2-ம் உலகப்போருக்கு பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, நான்சி பெலோசி தைவான் சென்றால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது.
ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பினார்.
@Military_News4
இந்த சூழலில் தான் தைவானை சுற்றி சீனா மிகப்பெரிய இராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. தைவானுக்கு 12 மைல்கள் தொலைவில் முன்னெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில் முதன்முறையாக முக்கிய பகுதிகளை சீனா இணைத்துள்ளது.
இந்த நிலையில் சீனா தனது ராணுவப் பயிற்சியின் போது ஏவுகணைகளை வீசியதாக தைவான் தற்போது தெரிவித்துள்ளது.
தைவானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கரையோரங்களில் சீனா ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தங்கள் நாட்டு பாதுகாப்பு அமைப்புகளை தயார்ப்படுத்தியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.