நெருக்கும் சீனா... தைவான் கடற்பகுதியில் துவங்கிய கப்பல் நடமாட்டம்
தைவான் அருகே மீண்டும் போர் ஒத்திகையை சீனா முன்னெடுத்துள்ள நிலையிலும், கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை முதல் தைவானின் முக்கிய துறைமுகத்திற்கு தெற்கே சீனா ராணுவ பயிற்சி மண்டலம் வழியாக 40க்கும் மேற்பட்ட கப்பல்கள் சென்றுள்ளன.
தைவான் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தானது பல ஆண்டுகளுக்கு பின்னர் சீனா தனது மிகவும் ஆத்திரமூட்டும் இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியதிலிருந்து நிச்சயமற்ற தன்மையையும் தாமதத்தையும் எதிர்கொண்டது.
சில கப்பல் உரிமையாளர்கள் தைவான் ஜலசந்தி ஊடாக போக்குவரத்தை ரத்து செய்தனர், ஆனால் சிலர் சீனாவின் போர் பயிற்சி மண்டலத்திற்கு வெளியே புறப்பட்டு சென்றனர்.
@FMT
மட்டுமின்றி, தெற்கு தைவானில் உள்ள முக்கிய துறைமுகமான கயோசியுங்கை நெருங்குவதற்கும் பல கப்பல்கள் தயங்கின. முன்னெடுக்கப்பட்டுவரும் போர் ஒத்திகையை ஞாயிறன்று முடித்துக்கொள்வதாக சீனா ஏற்கனவே கூறி வந்த நிலையில், தற்போது நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு கடற்படைக்கு எதிரான தாக்குதல் உத்திகளை பயிற்சிக்கு உட்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் குறித்த பயிற்சிகள் அனைத்தும் தைவான் தீவைச் சுற்றி முன்னெடுக்கப்படுமா அல்லது எங்கே முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் சீனா விளக்கமளிக்க மறுத்துள்ளது.
மேலும், இதுவரை கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எச்சரிக்கை அறிக்கையை சீனா வெளியிடவும் இல்லை.
ஒத்திகை தொடங்கப்படும் என சீனா அறிவித்துள்ள நிலையில், கப்பல் போக்குவரத்தும் விமான சேவையும் மீண்டும் துவக்கப்பட்ட அறிகுறிகள் தென்பட்டதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.