சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்: வெளியான முக்கிய தகவல்
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் மக்கள் நடமாட்டங்களுக்கு கடுமையான புதிய கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது.
டெல்டா மாறுபாடு பரவலால் சீனாவில் நிலைமை சற்று மாறியுள்ளது. சீனாவில் புதிதாக அறிவிக்கப்பட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
யாங்சோவின் கிழக்கு நகரத்துடனான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது சூழலில் பெரியளவில் தொற்றுகள் பரவுவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டவில்லை.
ஆனால், வுஹான் உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் பரவலாக உள்ளன.
தடமறிதல் செயலிகளைப் பயன்படுத்தி தொற்று பரவும் பகுதிகளை கண்டறிய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
மேலும், தொற்று உறுதியாகும் நபர்களிடமிருந்து வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.