சில நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றன! உளவு கப்பல் விவகாரத்தில் சீனா குற்றச்சாட்டு
*சீனாவின் யுவான் வாங் 5 ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்காக நியமிக்கப்பட்ட கப்பல் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது
*11,000 டன்கள் எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது இந்தக் யுவான் வாங் 5 கப்பல்
சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தனது யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பலை, இலங்கையின் ஹம்பன்டோட்டா துறைமுகத்தில் நிலைநிறுத்தி செயற்கைகோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது.
ஆனால், சீனாவின் கப்பல் உண்மையில் ஒரு உளவு கப்பல் என்றும், அது இலங்கையில் நிலைநிறுத்தப்படுவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இந்தியா குற்றம்சாட்டியது.
PC: Getty Images
இதனைத் தொடர்ந்து குறித்த கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை கூறியதற்கு பதிலளித்த சீனா, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியது. ஆனால் இலங்கை அதனை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், சீனாவின் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், யுவான் வாங் 5 கப்பல் தனது வேகத்தை அதிகரித்து, ஹம்பன்டோட்டாவில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் ஒரு புள்ளியை அடைந்ததாகவும், நேற்றிரவு அந்தமான் தீவுகளை நோக்கி தனது திசையை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
PC: Andy Wong/AP
சில நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பாதுகாப்பு கவலைகள் என்று கூறுவது முற்றிலும் நியாயமற்றது என சீனா குற்றம்சாட்டியுள்ளது.