நடுக்கடலில் அமெரிக்க போர்க்கப்பல், சீன இராணுவம் இடையே நடந்ந பரபரப்பு சம்பவம்! அதிகரிக்கும் பதற்றம்
தென் சீனக் கடலில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை எச்சரித்ததாக சீனா தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து சீனா இராணுவம் அளித்த தகவலின் படி, தென் சீனக் கடலில் உள்ள பாராசெல் தீவு அருகே நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை சீன இராணுவம் எச்சரித்தது.
அமெரிக்காவின் பென்ஃபோல்ட் போர்க்கப்பல் சட்டவிரோதமாக அனுமதியின்றி நாட்டின் இறையாண்மையை மீறி சீன பிராந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தது.
அமெரிக்க போர்க்கப்பலின் நடவடிக்கையை சீன கடற்பைடை மற்றும் விமான படைகள் கண்காணித்தன.
அமெரிக்கா தரப்பு உடனடியாக இந்த தூண்டுதல் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினோம், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தோம் என சீன இராணுவம் தெரிவத்துள்ளது.
இதனிடையே, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு பாராசெல் தீவின் வழியாக பயணிக்க அமெரிக்க போர்க்கப்பலுக்கு உரிமைகள் மற்றும் சுதந்திரம் இருப்பதாக அமெரிக்க கடற்படை வலியுறுத்தியுள்ளது.
தென் சீனக் கடலின் பரந்த நிலப்பரப்பை சீனா உரிமை கொண்டாடுகிறது.
தைவான், வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உரிமைகோரல்களைக் கொண்டுள்ளன.