அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி.. சீனாவால் ஏற்பட்ட பதற்றம்!
சீனா 30 போர் விமானங்களை தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அனுப்பியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தைவானை தனக்கு சொந்தமானது என கூறி வரும் சீனா, அந்நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தைவானுக்கும்-அமெரிக்காவுக்கும் முறையான வர்த்தக உறவு இல்லை என்றாலும், சர்வதேச ஆதரவாளராகவும், ஆயுதங்களை வழங்குபவராகவும் இருந்து வருகிறது.
இதன் காரணமாக தைவான் மீது படையெடுக்க கூடாது என அமெரிக்க சமீபத்தில் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், அமெரிக்கா 30 போர் விமானங்களை தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், சீனாவின் 30 ராணுவ விமானங்கள் எங்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் தென்மேற்கு பகுதிக்குள் நுழைந்துள்ளன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு போர் விமானங்கள். அதற்கு பதிலடியாக எங்கள் சொந்த விமானப் படையையும், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பையும் நிலைநிறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளது.
Photo Credit: AFP
முன்னதாக, அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தைவான் தெரிவித்த நிலையில், இந்த மிகப்பெரிய ஊடுருவலை சீனா செய்துள்ளது.
இதற்கு முன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் 18 போர் விமானங்களை தைவானின் வான் எல்லைக்கு அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இந்த ஊடுருவலை நடத்தியுள்ளது.
AFP செய்தி நிறுவனத்தின் தரவுத்தளத்தின்படி, கடந்த ஆண்டு சீன போர் விமானங்கள் தைவானின் பாதுகாப்பு எல்லைக்குள் 969 ஊடுருவல்களை செய்ததாகவும், இந்த ஆண்டு அதில் பாதியாக 465 முறை ஊடுருவல்களை நடத்தியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளது. சீனாவின் இந்த செயல்பாடுகளால் தைவானின் விமானப்படை மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Photo Credit: Reuters