WHO திட்டத்தால் அதிர்ச்சியில் சீனா! விஸ்வரூபமெடுக்கும் கொரோனா விவகாரம்
கொரோனா தோற்றம் குறித்த இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்தால் சீனா அதிர்ச்சியடைந்துள்ளது.
கொரோனா தோற்றம் குறித்த 2ம் கட்ட ஆய்வு நடத்தும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மூத்த சீன சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
WHO திட்டத்தால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், குறிப்பாக கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்ற வாதத்தால் என தேசிய சுகாதார ஆணையத்தில் துணை அமைச்சர் Zeng Yixin தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற வாதம் பொது அறிவு மற்றும் அறிவியலுக்கு எதிரான வதந்தி.
கொரோனா தோற்றத்தைக் கண்டுபிடிக்குமம் திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்று Zeng Yixin கூறியுள்ளார்.