ஜி-7 நாடுகளை சரமாரியாக சாடிய சீனா!
ஜி-7 நாடுகளை லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் சரமாரியாக சாடியுள்ளார்.
உலகளாவிய சவால்கள், சர்வதேச பிரச்சினைகள் மற்றும் சீனா மற்றும் ரஷ்யா போன்ற பகிரப்பட்ட வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஜி-7 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரித்தானியாவின் Cornwall கவுண்டியில் மூன்று நாள் மாநாட்டிற்காக கூடியுள்ளனர்.
மாநாட்டின் இரண்டாவது நாளில் சீனாவில் நடக்கும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் அராஜகத்தை எதிர்த்து கடுமையான அறிக்கை வெளியிடுமாறு ஜி7 நாடுகளின் மற்ற தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜி-7 மாநாட்டை சரமாரியாக சாடியுள்ளார்.
உலகளாவிய முடிவுகளை ஒரு சிறிய குழு நாடுகளால் தீரமானிக்கப்பட்ட நாட்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே முடிவுக்கு வந்துவிட்டது என்று லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பெரிய அல்லது சிறிய, வலுவான அல்லது பலவீனமான, ஏழை அல்லது பணக்கார நாடுகள் என அனைத்து உலக நாடுகளும் சமம் என எப்போதும் நாங்கள் நம்புகிறோம்.
உலக விவகாரங்கள் அனைத்து நாடுகளின் ஆலோசனையின் மூலமும் முடிவெடுக்கப்பட வேண்டும் என லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். கூறினார்.