கேரள கடற்பகுதியில் சரக்குக் கப்பலில் தீ விபத்து: மீட்பு நடவடிக்கைக்கு சீனா நன்றி!
கொழும்பில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட சீன சரக்குக் கப்பலின் மீட்பு முயற்சிகளுக்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.
சரக்குக் கப்பலில் தீ விபத்து
கொழும்பில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட சீன சரக்குக் கப்பலான எம்வி வான் ஹாய் 503 (MV Wan Hai 503), ஜூன் 7 அன்று அரபிக்கடலில் தீப்பிடித்தது.
கேரளாவில் உள்ள கோழிக்கோடு மற்றும் கண்ணூர் துறைமுகங்களுக்கு இடையே, பேப்பூர் கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது.
விபத்து தொடர்பான சிக்னல் கிடைத்தவுடன், கொச்சியில் உள்ள இந்திய கடல் கண்காணிப்பு மையம் உடனடியாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தது.
கப்பலில் இருந்த 22 ஊழியர்களில், 14 சீன நாட்டவர்கள் உட்பட 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காணாமல் போன நான்கு பேரைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
விரைவான மீட்பு நடவடிக்கைக்கு சீனா நன்றி
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விரைவான மற்றும் பயனுள்ள மீட்பு முயற்சிகளுக்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடி நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.
"கப்பலில் இருந்த 22 ஊழியர்களில் 14 பேர் சீனர்கள் மற்றும் 6 பேர் தைவானைச் சேர்ந்தவர்கள்" என்று யு ஜிங் கூறினார்.
"இந்திய கடற்படைக்கும், மும்பை கடலோர காவல்படைக்கும், அவர்கள் உடனடியாக செயல்பட்டு ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்டமைக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |