வீட்டுக்கு செல்ல மீண்டும் திருடனாக மாறி 8 கார்களை களவாடிய நபர்! இணையத்தில் வைரல்
சீனாவில் விமான டிக்கெட் செலவைத் தவிர்க்க 8 கார்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
விமான டிக்கெட் விலை அதிகம்
வடகிழக்கு சீனாவின் Liaoning மாகாணத்தைச் சேர்ந்த சென் என்ற குடும்பப்பெயர் கொண்ட நபர், ஹுனான் மாகாணத்தின் Changshaயில் தனியாக பயணம் செய்து வந்துள்ளார்.
பின்னர் தனது வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து விமான டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால், அதன் விலை 1,500 யுவான் (200 டொலர்கள்) என்பதால் அதிகம் என நினைத்த சென், அந்த டிக்கெட்டை ரத்து செய்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தீவிர கார் திருடரான அவர், வீட்டுக்கு செல்ல மீண்டும் அந்த பழக்கத்திற்கு திரும்பியுள்ளார்.
அதாவது, இரவில் பூட்டப்படாத கார் dealershipகளுக்குள் நுழைந்து, அலமாரிகளில் இருந்து சாவியை எடுத்து, சர்வீஸ் செய்யக் காத்திருந்த வாகனத்தை திருடியுள்ளார்.
8 கார்கள்
அதில் பயணிக்கத் தொடங்கிய சென், சூன் மாதம் தொடங்கி 7 நகரங்கள் வழியாக சென்றுள்ளார். வழியில் அவர் 8 கார்களைத் திருடியிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் ஒன்றில் எரிபொருள் தீர்ந்து போகும்போது, அதை விட்டுவிட்டு இன்னொன்றை எடுத்திருக்கிறார்.
பணத்தை மிச்சப்படுத்த உணவு மற்றும் சாலை கட்டணங்களுக்கு பணம் செலுத்த, கார்களில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை பயன்படுத்தியிருக்கிறார்.
சென்னின் சாலை பயணம் 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |