நெருப்புடன் விளையாடாதீர்கள்! ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் சீனா
தைவான் விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் நெருப்புடன் விளையாடுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிமை கோரும் சீனா
தைவானை தங்களது பிரதேசமாக கருதுவதால், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சீனா முயற்சித்து வருகிறது. ஆனால் தைவான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்கா தனது ஆதரவினை தெரிவிப்பது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் வெளிநாட்டு அரசியல்வாதிகள் தைவானுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக ஜேர்மன் மற்றும் லிதுவேனியாவின் எம்.பிக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தைவான் சென்றது சீனாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தைவானின் சுதந்திரம் தண்டிக்கப்படும் என்று சீனா மீண்டும் அச்சுறுத்துகிறது.
@AP
எச்சரிக்கும் சீனா
இதுதொடர்பாக சீனா கூறும்போது, தைவானின் சுதந்திர பிரச்சனைகளில் உள்ள சீன எதிர்ப்பு சக்திகள் நெருப்புடன் விளையாடுகின்றன என தெரிவித்துள்ளது.
அத்துடன் சீனாவின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் மா சியாவோகுவாங் கூறுகையில், 'இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், தைவான் சுதந்திரத்திற்கான சதிகளை முறியடிப்பதற்கும் புத்தாண்டில் பெய்ஜிங் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது.
@Xinhua
தைவானின் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சில நாடுகளில் உள்ள சீன எதிர்ப்பு கூறுகள் வேண்டுமென்றே ஆத்திரமூட்டலை ஏற்படுத்துகின்றன.
அவர்கள் தைவான் சுதந்திர பிரிவினைவாத சக்திகளுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்புவதை நிறுத்தவும்' என தெரிவித்துள்ளார்.