அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் போரில் வென்ற சீனா... தரவுகள் அம்பலம்
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பல வருட வர்த்தகப் போர் கடந்த பிப்ரவரியில் ஜனாதிபதி ட்ரம்ப், கனடா, சீனா மற்றும் மெக்சிகோ மீது வரிகளை விதித்தபோது மேலும் தீவிரமடைந்தது.
ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்
அப்போதிருந்து, இரு நாடுகளும் குழப்பமான உறவில் சிக்கிக் கொண்டன. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் வரிகளையும் விதித்துக் கொண்டனர்.

ஆனால் ட்ரம்ப் மற்றும் சீனத் தலைவர் ஜி ஜின்பிங் கடந்த வியாழக்கிழமை தென் கொரியாவில் வர்த்தகம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதித்த நிலையில், அமெரிக்காவிற்குள் ஃபெண்டானில் நுழைவதை சீனா தடுக்கும் என்ற வாக்குறுதிகளுக்கு ஈடாக,
சீனப் பொருட்களுக்கான வரிகளை 10 சதவீதமாக குறைக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அமெரிக்காவிற்குள் நுழையும் சீனப் பொருட்களுக்கான அமுலில் உள்ள வரி விகிதம் இன்னும் 47 சதவீதமாகவே இருக்கும்.
ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்கு முன்பே, அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் சரிவடைந்து வந்தன. கடந்த சில மாதங்களாக இது இன்னும் தீவிரமடைந்தது. செப்டம்பரில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மொத்தம் 34.3 பில்லியன் டொலராக இருந்தது,
இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 47 பில்லியன் டொலராக இருந்தது. அதாவது 27 சதவீதம் சரிவு. ஆனால் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இவ்வளவு பெரிய சரிவு இருந்தபோதிலும், சீன ஏற்றுமதி இந்த ஆண்டு 6.1% அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாத தரவுகளில் முந்தைய ஆண்டை விட 8.3% அதிகரிப்பு காணப்படுகிறது. சீனா தனது ஏற்றுமதிகளை பல்வகைப்படுத்துவது மட்டுமல்லாமல், அமெரிக்க பொருட்களுக்கு மாற்றாக மற்ற நாடுகளிலிருந்து அதிகமான பொருட்களை இறக்குமதி செய்தும் வருகிறது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க சோயாபீன்களின் சீன இறக்குமதி தொடர்ந்து குறைந்து வருகிறது, பல ஆண்டுகளில் முதல் முறையாக, செப்டம்பர் மாதத்தில் சீனா அமெரிக்காவிலிருந்து சோயாபீன் இறக்குமதி செய்யவில்லை.
மாறாக, சீனா பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவை நோக்கி திரும்பியுள்ளது, அங்கிருந்து சீனாவிற்கு சோயாபீன் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செப்டம்பரில், அர்ஜென்டினா அரசாங்கம் அதன் சோயாபீன் ஏற்றுமதி வரியை தற்காலிகமாக நிறுத்தியது, இதனால் தென் அமெரிக்க நாட்டிலிருந்து சுமார் 1.2 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன் வாங்க சீன அரசை தூண்டியது.
சீனா ஒப்புக்கொண்டது
இந்த நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்காவில் இருந்து இந்த பருவத்தில் 12 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டது.
அத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் வாங்க உறுதியளித்துள்ளது. இதனிடையே, அமெரிக்க மாட்டிறைச்சியின் மூன்றாவது பெரிய இறக்குமதியாளரான சீனா, சமீபத்திய மாதங்களில் மிகக் குறைந்த அளவே மாட்டிறைச்சியை வாங்குகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, சீனா 481 மில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க மாட்டிறைச்சியை வாங்கியது, இது அமெரிக்க மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 8% ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 47% சரிவு.
சோயாபீன் போலவே, அவுஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்து சீனா அதிக அளவு மாட்டிறைச்சியை வாங்கியது. இதனால், அமெரிக்க மாட்டிறைச்சியின் சீன இறக்குமதி தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த மாதம் சீனா 11 மில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க மாட்டிறைச்சியை வாங்கியது, இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 90% சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |