அமெரிக்கா மீது சீனா உயிரியல் யுத்தம் - ஆபத்தான கிருமிகளுடன் ஊடுருவிய ஆராய்ச்சியாளர்கள்
ஆபத்தான உயிரியல் கிருமிகளை அமெரிக்காவிற்குள் கொண்டு செல்ல முயன்ற ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆபத்தான உயிரியல் கிருமிகள்
சீனாவை சேர்ந்த 33 வயதான Yunqing Jian என்ற பெண், அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், Yunqing Jian மற்றும் அவரது காதலருமான Zunyong Liu, அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையம் வழியாக ஆபத்தான உயிரியல் கிருமியுடன் ஊடுருவ முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஃபியூசேரியம் கிராமினியரம்(Fusarium graminearum) என அழைக்கப்படும் இந்த கிருமியானது, கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி போன்ற பயிர்களுக்கு ஹெட் பிளைட்(head blight) என்ற நோயை ஏற்படுத்த உள்ளது.
பயிர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், கடுமையான மகசூல் இழப்பு ஏற்படும். மேலும், இந்த பாதிக்கபட்ட பயிர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் மற்றும் தீவனங்களை உண்ணும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்படும்.
இந்த கொடிய கிருமிகள் ஆண்டுதோறும், உலகளவில் பில்லியன் கணக்கான டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
பின்னணியில் சீனா
இதன் பின்னணியில் சீனா உள்ளதாக FBI இயக்குநர் காஷ் படேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்ததாகவும், சீனாவில் இந்த நோய்க்கிருமி தொடர்பான பணிகளுக்காக சீன அரசாங்கத்திடம் இருந்து நிதி பெற்றதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
New... I can confirm that the FBI arrested a Chinese national within the United States who allegedly smuggled a dangerous biological pathogen into the country.
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) June 3, 2025
The individual, Yunqing Jian, is alleged to have smuggled a dangerous fungus called "Fusarium graminearum," which is an…
ஜியானின் காதலர் லியு, சீன பல்கலைக்கழகத்தில் இந்த கிருமிகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். முதலில் இதை மறுத்த லியு, பின்னர் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் வைத்து இதனை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்காவிற்கு கடத்தியதை ஒப்புக்கொண்டார்.
இருவர் மீதும் சதி, அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், பொய்யான தகவல்களை அளித்தல் மற்றும் விசா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கர்களின் உயிர்களையும், நமது பொருளாதாரத்தையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்த, அமெரிக்க நிறுவனங்களில் ஊடுருவி நமது உணவு விநியோகத்தை குறிவைக்க, செயல்பாட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அனுப்ப சீன கம்யூனிஸ்ட் கட்சி, 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்பதை நினைவூட்டுகிறது, இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |