வுஹானில் மீண்டும் பரபரப்பு.. நகரில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை! வெளியான முக்கிய தகவல்
சீனா நகரான வுஹானில் ஓராண்டிற்கு பிறகு முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019 டிசம்பர் மாத கடைசியில் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி போட்டது.
இன்னமும் உலக நாடுகள் கொரோனா பிடியிலிருந்து மீள முடியாமல் திணறி வருகின்றனர்.
கொரோனாவால் மோசமாக பதிக்கப்பட்ட சீன, விரைவாக அதிலிருந்து மீண்டு வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், தற்போது சீனாவிலும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு பரவ தொடங்கியுள்ளது.
குறிப்பாக, கொரோனா மூலம் உலக முழுவதும் பிரபலமான வுஹான் நகரில் ஓராண்டிற்கு பிறகு, ஒரு நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வுஹான் நகரில் உள்ள குடியிருப்போர் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதவாது, அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விரிவான நியூக்ளிக் அமில சோதனை மேற்கொள்ளும் பணிகள் விரைவாக தொடங்கப்படும் என வுஹான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.