வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது... சீன நகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்
கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என குடியிருப்பாளர்களுக்கு உள்ளூர் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
Fujian மாகாணத்தில் உள்ள Xiamen நகர அரசாங்கமே இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
5 மில்லியன் மக்கள் வாழும் அழகிய நகரமான Xiamen, Fujian மாகாணத்தின் நான்கு நகரங்களில் ஒன்றாகும்.
கடந்த சில நாட்களாக நகரில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் சமீபத்திய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக Xiamen மாறியுள்ளது.
இதன் காரணமாக குடியிருப்பாளர்கள் தேலையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிட்டுள்ள Xiamen அரசு, நகரில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு அரங்குகள், சுற்றுலா தளங்கள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்வுகள் என அனைத்தையும் மூடியுள்ளது.
இந்த குறுகிய முழு ஊரடங்கு நடவடிக்கைகள், நான்கு நாள் மத்திய இலையுதிர் பண்டிகை விடுமுறையின் முதல் நாளில் அமுலுக்கு வந்தது.
விடுமுறை நாட்கள் முடியும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என கூறப்படுகிறது.
வெளியாட்டகள் அனுமதியின்றி Xiamen குடியிருப்பாளர்கள் வீடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய வாகனங்கள் Xiamen குடியிருப்பு பகுதிக்கு உள்ளே அல்லது அங்கிருந்து வெளியே செல்ல அனுமதியில்லை மற்றும் உணவகங்களில் உள்ளே அமர்ந்து உணவருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.