சீன நிறுவனத்துக்கு ஜேர்மன் துறைமுகத்தில் அனுமதி: ஜேர்மன் அரசியலில் சர்ச்சையை உருவாக்கிய விடயம்...
சீன நிறுவனம் ஒன்றிற்கு ஜேர்மன் துறைமுகம் ஒன்றில் பங்குகளை விற்பது தொடர்பான விடயம் ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியது.
தற்போது அந்த திட்டம் தொடர்பில் சில மாற்றங்களைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீன நிறுவனம் ஒன்றிற்கு ஜேர்மன் துறைமுகம் ஒன்றின் பங்குகள் சிலவற்றை விற்பது என ஜேர்மன் அரசு முடிவு செய்தது.
சீன கப்பல் நிறுவனமான Cosco என்னும் நிறுவனத்துக்கு, ஜேர்மனியின் மிகப்பெரிய துறைமுகமான ஹாம்பர்க் துறைமுகத்தின் பங்குகளில் 35 சதவிகித பங்குகளை விற்பது என முதலில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அது தொடர்பாக ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கும் பல அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. அப்படி சீனாவுக்கு ஜேர்மனியின் முக்கிய துறைமுகத்தை விற்பது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
ஆகவே, தற்போது முன்னர் திட்டமிட்டபடி 35 சதவிகித பங்குகளை அல்ல, 25 சதவிகிதத்துக்கும் குறைவான பங்குகளை விற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Image: Yao Dawei/Xinhua/IMAGO
கேபினட்டும் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு ஜேர்மனியின் முக்கிய துறைமுகத்தை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் பொருளாதாரத்துறை அமைச்சரான Robert Habeck ஆவார்.
ஆனால், இந்த திட்டத்தை ஆதரிப்பவர்களோ, இந்த ஒப்பந்தம், ஹாம்பர்க் துறைமுகம் மற்றவர்களுடன் போட்டி போடும் நிலையை உருவாக்கும், அது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்கள்.