குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற இளம் ஜோடி! மருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவில் தங்கள் 2 குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
குழந்தைகளை கொல்ல கட்டாயப்படுத்தல்
சீனாவைச் சேர்ந்த Zhang Bo என்ற நபர், தனது மனைவி சென் மெய்லினை 2020ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.
அதன் பின்னர் அவர்களின் இரண்டு குழந்தைகளின் Zhang இடமே வளர்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் Ye Chengchen என்ற பெண்ணுடன் Zhang Boவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
தங்களின் உறவுக்கு குழந்தைகள் தடையாக இருப்பதாக நினைத்த Ye Chengchen, குழந்தைகளை கொல்ல வேண்டும் என Zhang Bo-யை கட்டாயப்படுத்தியுள்ளார்.
@X
மரண தண்டனை
இதனையடுத்து, அவர்கள் வசித்த குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து சன்னல் வழியாக குழந்தைகளை தூக்கி வீசியுள்ளனர். இதில் இரு குழந்தைகளும் துடிதுடித்து இறந்துள்ளன.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் Zhang Bo, Ye Chengchen கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும், ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சீனா மட்டுமன்றி உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
iStock Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |