தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்... சீனா பூண்டு இறக்குமதியால் அமெரிக்காவில் கொந்தளிப்பு
சீனாவில் இருந்து பூண்டு இறக்குமதி செய்வதால் தேசிய பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதாரமற்ற உற்பத்தி முறை
அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர் ரிக் ஸ்காட் இது தொடர்பில் வர்த்தக செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுகாதாரமற்ற உற்பத்தி முறைகளை மேற்கோள் காட்டி, சீன பூண்டு பாதுகாப்பற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
Credit: Lei Xu
உலக அளவில் பூண்டு ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது சீனா. சீனாவில் இருந்து பெருமளவு பூண்டு இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சீனத்து பூண்டு தொடர்பில் அமெரிக்காவில் கடும் விவாதம் எழுந்துள்ளது.
மேலும் மட்டமான விலைக்கு சீனா பூண்டை சந்தையில் நிரப்பி விடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மட்டுமின்றி, 1990 களின் நடுப்பகுதியில் இருந்து, அமெரிக்க உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டது.
2019ல் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின் போது, இந்த வரிகள் மேலும் அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது சீனத்து பூண்டுகள் தொடர்பில் பொதுமக்களின் நலன் குறித்த கவலையை செனட்டர் ரிக் ஸ்காட் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க மக்களின் பாதுகாப்பு
அதில், வெளி நாடுகளில் குறிப்பாக, கம்யூனிஸ்ட் சீனாவில் வளர்க்கப்படும் பூண்டின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான பொது சுகாதார கவலை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
மேலும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பில் குறிப்பிட்ட இறக்குமதியின் தாக்கம் குறித்த விசாரணைகளை அனுமதிக்கும் சட்டத்தின் கீழ், வர்த்தகத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து வகையான பூண்டு தொடர்பிலும் அவர் விளக்கமான தரவுகளை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு என்பது நமது தேசிய பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார செழுமைக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் அவசரநிலை ஆகும் எனவும் தமது கடிதத்தில் செனட்டர் ரிக் ஸ்காட் பதிவு செய்துள்ளார்.
ஆனால் செனட்டர் ரிக் ஸ்காட் பதிவு செய்துள்ளது போன்று தரமற்ற முறையில் சீனாவில் பூண்டு உற்பத்தி செய்யப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கனேடிய பல்கலைக்கழகமான McGill-ன் அறிவியல் மற்றும் சமூகத்திற்கான அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |