பிரபல நாட்டிற்குள் அத்துமீறி படையெடுத்த சீன போர் விமானங்கள்! இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றம்
தங்கள் நாட்டு வான்வெளியில் இதுவரை இல்லாத அளவிற்கு பல சீன இராணுவ ஜெட் விமானங்கள் பறந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை போர் விமானங்கள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள் என சுமார் 25 விமானங்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் (ADIZ) நுழைந்தது என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகாரித்து வரும் சீன அத்துமீறல்கள் குறித்த அமெரிக்க எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து சீன விமானங்கள் தைவானுக்குள் படையெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு அதிகபடியான சீன விமானங்கள் தைவானுக்குள் ஊடுருவது இதுதான் முதல் முறையாகும். சீன ஜெட் விமானங்களை எச்சரிக்க போர் விமானங்களை அனுப்பியதாகவும், அதே நேரத்தில் அவற்றை கண்காணிக்க ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
சமீபத்திய மாதங்களில் தைவானின் தெற்குப் பகுதிக்கும், தென் சீனக் கடலில் உள்ள தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளுக்கும் இடையிலான சர்வதேச கடல் வழியாக சீனா வழக்கமான விமான பயணங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.