கொரோனா திட்டமிட்டு பரவல்? வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி வெளியிட்ட தகவல்
கொரோனா சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கிசிந்ததாக தகவல்கள் பரவிவரும் நிலையில் அதுகுறித்து அந்த ஆய்வகத்தின் முக்கிய விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக பரவியதாக பரவும் தகவலை ஹவுான் ஆய்வகத்தில் பயணியாற்றும் மூத்த சீன விஞ்ஞானி டாக்டர் Shi Zhengli முற்றிலுமாக மறுத்துள்ளார்.
டாக்டர் Shi Zhengli கூறியதாவது, கொரோனா வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியதாக ஆதாரமே இல்லாத ஒன்றிற்கு எப்படி நான் ஆதாரமளிக்க முடியும்.
உலகம் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. அப்பாவி விஞ்ஞானி மீது தொடர்ந்து பழி சுமத்துகிறார்கள்.
வைரஸை உருவாக்கும் GOF சோதனைகளை ஒருபோதும் வுஹான் ஆய்வகம் நடத்தவில்லை அல்லது அதுபோன்ற ஆய்வுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று டாக்டர் Shi Zhengli கூறியுள்ளார்.
மேலும் அவர், வூஹான் பரிசோதனைக் கூடத்துக்கு சீன அரசு p4 தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. பரிசோதனைக் கூடங்களில் அதீத சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கடைப்பிடிக்கப்பட்டால்தான் இந்த சான்றிதழைப் பெற முடியும்.
அதன்படி பார்த்தால் பரிசோதனை கூட்டத்துக்குள் பரிசோதிக்கப்படும் எந்த ஒரு சாம்பலும் கூடத்தைவிட்டு வெளியே செல்ல வாய்ப்பில்லை.
அங்கு பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு கவச உடை, மாஸ்க் உள்ளிட்ட பல கட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு மிகப் பாதுகாப்பாக அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் விஞ்ஞானிகளின் அஜாக்கிரதை காரணமாக இந்த பரிசோதனை கூடத்தில் இருந்த வவ்வால் இறகு சாம்பிள் கழிவில் கலக்க வாய்ப்பே இல்லை என்வும் Shi Zhengli உறுதிபடத் தெரிவித்துள்ளார்..