சீனாவில் பாலியல் புகார் கூறிய டென்னிஸ் வீராங்கனைக்கு நடந்தது என்ன?

china peng shuai olympic committee
By Fathima Nov 23, 2021 02:33 AM GMT
Report
Courtesy: BBC Tamil

சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் மீது பாலியல் புகார் கூறிய அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் மூன்று வாரங்களுக்குப் பிறகு காணொளி அழைப்பில் பேசியிருக்கிறார்.

தன்னுடன் சுமார் 30 நிமிடங்கள் வரை பேசியதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கூறியுள்ளார். 

தாம் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர் கூறியதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.

"அவர் நலமாக இருந்தார். அதுவே எங்களது முக்கியமான கவலையாக இருந்தது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

35 வயதான பெங் ஷூயேய் சீனாவின் முதல்நிலை இரட்டையர் டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர்.

சீன முன்னாள் துணைப் பிரதமர் ஷாங் காவ்லிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை அவர் கூறியிருந்தார். கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இது தொடர்பாக வெய்போ இணையதளத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியிருந்தார்.

ஷாங் காவ்லியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படி தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்தப் பதிவில் பெங் கூறியிருந்தார்.

ஆனால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அந்தப் பதிவு காணாமல் போனது. அவரது பக்கத்தில் கருத்துகளைப் பதிவிடுவதும் தடுக்கப்பட்டது. அதனால் அவரைப் பின்தொடரும் சுமார் 5 லட்சம் பேரும் தங்களது கருத்துகளை பதிவிட முடியாமல் தவித்தனர்.

ஷாங் காவ்லி பெயரைக் குறிப்பிட்ட பிற பதிவுகளும் தேடுபொறியில் காட்டவில்லை. இதனால் அவரது பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பதிவுகள் இடப்பட்டன.

அதன் பிறகு பெங் பொதுவெளியில் இருந்து காணாமல் போனார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.


இது பரவலாகக் கவலையை ஏற்படுத்தியது. சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். அவர் பாதுகாப்பாக இருப்பதை சீன அரசு உறுதி செய்ய வேண்டும் என பல நாட்டு அரசுகளும் கோரிக்கை விடுத்தன.

டென்னிஸ் நட்சத்திரங்கள் நவோமி ஒசாகா, செரீனா வில்லியஸ் ஆகியோரும் குரல் எழுப்பியோரில் அடங்குவார்கள்.

நியூயார்க்கில் சீன பெண்ணியவாதிகளின் குழு பெங் ஷூயேய்க்கு ஆதரவாக ஒரு பேரணியை நடத்தப்பட்டது.

புகைப்படங்களை வெளியிட்ட சீன ஊடகங்கள்

பெங்கின் இருப்பிடம் குறித்த விவரம் தெரியாததால் எழுந்த குரல்களுக்கு மத்தியில், அவர் நலமாக இருப்பது போன்ற புகைப்படங்களை சீன அரசு ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டன.

ஞாயிற்றுக்கிழமையன்று பெய்ஜிங் நகரில் நடந்த ஒரு டென்னிஸ் போட்டியில் பெங் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு காணொளியை அரசு ஊடக பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்தப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தங்களது அதிகாரபூர்வ WeChat பக்கத்தில் பெங்கின் புகைப்படங்களை வெளியிட்டனர்.

சீனாவில் பாலியல் புகார் கூறிய டென்னிஸ் வீராங்கனைக்கு நடந்தது என்ன? | Chinese Tennis Star Says She Is Safe In Video Call

ஆனால் அவை மட்டுமே பெங் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதற்குப் போதுமான ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்று பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (WTA) செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை அந்த அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை ஒனறிலும் இதையே வலியுறுத்தியது. "குறிப்பிட்ட காணொளிகள் மூலம் WTA-இன் கவலைகள் மறையவில்லை " என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கிரிஸ்டல் சென் பிபிசியிடம், வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பெங் "உடல் பாதிப்பில்லாமல்" இருப்பதைக் காட்டுவதாகத் தோன்றினாலும், அவர் "உண்மையில் சுதந்திரமாக இல்லை" என்று கூறினார்.

ஐஓசி அறிக்கையில் கூறப்பட்டது என்ன?

மூன்று வாரங்களுக்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸுடன் பெங் காணொளி மூலம் உரையாடியதாக ஒலிமபிக் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"30 நிமிட அழைப்பின் தொடக்கத்தில், பெங் ஷுவாய் தனது நலம் குறித்த ஐஓசியின் அக்கறைக்கு நன்றி தெரிவித்தார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகக் கூறினார். பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டில் வசிப்பதாகத் தெரிவித்தார். இந்த நேரத்தில் அவரது தனியுரிமை மதிக்கப்பட வேண்டும்" என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

"அவர் இப்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட விரும்புகிறார். இருப்பினும், அவர் தொடர்ந்து டென்னிஸ் ஆடுவார்"

IOC அறிக்கையில் வீடியோ அழைப்பின்போது எடுக்கப்பட்ட படம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பெங் கேமராவை நோக்கி சிரித்துக் கொண்டிருக்கிறார்.   

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US