நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை! 250 பக்க அறிக்கையை தயார் செய்த ஆர்டிஓ தகவல்
சித்ரா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என ஆர்டிஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் 250 பக்கங்களில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சித்ரா மரணம் தொடர்பான 250 பக்க அறிக்கையை காவல்துறையிடம் ஆர்டிஓ தாக்கல் செய்கிறார்.
அந்த அறிக்கையில் சித்ரா மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஆர்டிஓ தெரிவித்துள்ளது.