மாறும் விதி... கடுமையாகவிருக்கும் EES திட்டம்: அதிகரிக்கவிருக்கும் குழப்பங்கள்
EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால் எல்லைகளில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் EES திட்டம் கடுமையாக்கப்பட உள்ளதால், எல்லைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை, மேலும் மோசமடைய உள்ளது.
Entry/Exit System (EES)
ஏப்ரல் மாதம் அறிமுகமான ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.

இப்படி ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.
இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
கடுமையாகவிருக்கும் EES திட்டம் விடயம் என்னவென்றால், எல்லைகளில் கூட்டம் அதிகரிக்கும்போது, வரிசைகள் மிக நீளமாகும்போது, சில நாடுகள் தற்காலிகமாக EES திட்டத்தை இடைநிறுத்துகின்றன.
ஆனால், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி முதல், EES திட்ட விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன.
அதாவது, இனி எல்லைகளில் கூட்டம் எவ்வளவு அதிகமானாலும், மக்கள் எவ்வளவு நீண்ட வரிசைகளில் காத்திருந்தாலும், EES திட்டம் இடைநிறுத்தப்படாது என ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியாகிய Frontex என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆக, எல்லைகளிலும், விமான நிலையங்களிலும், மீண்டும் மக்கள் மிக நீண்ட நேரம், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை உருவாகப்போகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |