அமெரிக்காவில் கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்! படகு விபத்தில் 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.. உலக செய்திகள்
விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில், அணிவகுத்துச் சென்ற குழுவினர் மீது வாகன சாரதியொருவர் தனது காரை வேகமாக செலுத்தி மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சிலர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தைகள் உட்பட மேலும் பலர காயமடைந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வார தொடக்கத்தில் லிபியாவிற்கு வடக்கே மத்தியதரைக் கடலில் படகு மூலம் இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகவரகம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம் பழைய நகரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.