பிரித்தானியாவில் அரசு ஊழியர்களுக்கு பேரிடி: பிரதமர் போரிஸ் உத்தரவால் பரபரப்பு
பிரித்தானியாவில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தில் ஒரு பங்காக குறைக்க அமைச்சர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த முடிவால் 3.5 பில்லியன் பவுண்டுகள் வரையில் சேமிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசாங்கத்தின் செலவைக் குறைக்க முடிவெடுத்துள்ளோம் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொற்று காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜோன்சன், 90,000 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் கட்டத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதனால் சேமிக்கப்படும் பில்லியன்களை வரிக் குறைப்புகளுக்காக பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து அமைச்சர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சுமார் 91,000 அரசு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இந்த முடிவால் ஆண்டுக்கு 3.5 பில்லியன் பவுண்டுகள் சேமிக்க முடியும் என அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், உடனடி பலனாக பொதுமக்களுக்கு வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் அமுலுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பலம் வாய்ந்த அரசு ஊழியர்கள் சங்கங்கள் போர்க்கொடி தூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அமைச்சர்கள் கண்டிப்பாக அதன் தாக்கத்தை உணர்வார்கள் என கூறப்படுகிறது.
நேட்டோவில் இணைவதா? இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா
கொரோனா தொற்றுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்குத் திரும்பும்படி வற்புறுத்தியதற்காக அரசாங்கத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் ஏற்கனவே கசப்புடன் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே தற்போது அரசு ஊழியர்களுக்கு வேட்டு வைக்கும் புதிய திட்டத்துடன் போரிஸ் நிர்வாகம் முன்வந்துள்ளது. பிரித்தானியாவில் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 475,000 என கூறப்படுகிறது.
சராசரியாக ஒரு அரசு ஊழியர் 28,000 பவுண்டுகள் ஊதியமாக பெறுகிறார். மட்டுமின்றி 10,000 பவுட்னுகள் பிற சலுகைகளாக பெறுகிறார்.
இதன் அடிப்படையிலேயே 91,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினால் அரசுக்கு 3.5 பில்லியன் பவுண்டுகள் தொகை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017