இந்திய வீராங்கனை கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்த மாநில அரசு
இந்திய வீராங்கனை கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
ரூ.1 கோடி அறிவிப்பு
இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 2வது முறையாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்தது. அதேபோல, ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கொங்கடி திரிஷா பெற்றார்.
இந்நிலையில் நேற்று, ஆட்ட நாயகியான கொங்கடி திரிஷா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்துப் பேசினார்.
அப்போது, சிறப்பான ஆட்டம் ஆடியதற்காகா கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
அதேபோல, அணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கானா வீராங்கனை துருதி கேசரி, அணியின் தலைமை பயிற்சியாளர் நவுஷீன் மற்றும் பயிற்சியாளர் ஷாலினி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |