தலைமை விமானியாகும் கனவு... நேபாள விமான விபத்தில் பலியான பெண் விமானியின் துயர பின்னணி
நேபாளத்தில் 72 பேர்களை பலிகொண்ட விமான விபத்தில் பலியான துணை விமானியின் துயர பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிறைவேறாத கனவு
எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் துணை விமானியாக செயல்பட்டவர் அஞ்சு கதீவாடா என்பவர். ஞாயிறன்று அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கினால், அவருக்கு தலைமை விமானி என்ற உரிமம் வழங்கப்பட இருந்தது.
@AP
மேலும், அஞ்சு துணை விமானியாக செயல்படும் கடைசி பயணம் அது எனவும் கூறப்படுகிறது. ஞாயிறு பயணத்தை முடித்துக் கொண்டால் அஞ்சு இனி தலைமை விமானியாக செயல்படலாம்.
பொதுவாக தலைமை விமானியாக உரிமம் பெறுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 100 மணி நேரங்கள் விமானம் இயக்கியிருக்க வேண்டும். துணை விமானியாக ஏற்கனவே நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் அஞ்சு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளார்.
Credit: East2West
விமானியான கணவரும்...
இந்த முறை வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, அஞ்சு தலைமை விமானி உரிமத்தைப் பெறவிருந்தார். ஆனால் அவரது கனவு நிறைவேற சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், விமானம் கோர விபத்தில் சிக்கியது.
அஞ்சுவுக்கு நேர்ந்த துயரம் போலவே அவரது கணவருக்கும் இதுபோன்ற ஒரு நெருக்கடி ஏற்பட்டிருந்தது. துணை விமானியான அவர் 2006ல் விமான விபத்து ஒன்றில் சிக்கி கொல்லப்பட்டார்.
@EPA
அவரும் எட்டி விமான சேவை நிறுவனத்திலேயே பணியாற்றியுள்ளார்.
விபத்தில் சிக்கிய அந்த விமானத்தில் 6 பயணிகளும் இரு விமானிகள் உட்பட நான்கு ஊழியர்களும் பலியாகினர். அதில் ஒருவர் அஞ்சுவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.