420 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு... பிரித்தானியாவிற்கு வெளிநாடொன்றின் நீதிமன்றம் உத்தரவு
சுட்டுக் கொல்லப்பட்ட 21 சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 420 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு வழங்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு நைஜீரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவ அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு நைஜீரிய நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

1949 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று, தென்கிழக்கு மாகாணமான எனுகுவில் உள்ள இவா பள்ளத்தாக்கில் உள்ள சுரங்கத்தில், வேலை நிலைமைகள் மற்றும் வழங்கப்படாத சம்பளங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
நைஜீரிய சுதந்திரத்திற்கான கோரிக்கைகளைத் தூண்டிய அந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் ஐம்பத்தொரு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு நைஜீரிய மனித உரிமை ஆர்வலர் மாசி கிரெக் ஓனோ என்பவரால் எனுகுவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
மோசமான பெண் ஒருவருடன் அருவருப்பான செயலில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர்: சூடுபிடிக்கும் எப்ஸ்டீன் விவகாரம்
வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், நீதிபதி அந்தோனி ஒனோவோ, பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரித்தானிய அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் வாதாடிய சட்டத்தரணி யெமி அகின்சே-ஜார்ஜ் டெஹ்ரிவிக்கையில், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், அபுஜாவில் உள்ள நைஜீரியாவின் அட்டர்னி ஜெனரல் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்திடம் லண்டனுக்குத் தெரிவித்து, தீர்ப்பை அமுல்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கோருவோம் என்றார்.
மௌ மௌ கிளர்ச்சி
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் முறையான அறிவிப்பு அனுப்பப்பட்டபோதிலும், பிரித்தானிய அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவோ அல்லது பதிலளிக்கவோ மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தின் போது நடந்த ஒரு உத்தியோகப்பூர்வ விசாரணையின் போது, தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி காவல்துறை அந்தச் செயலை நியாயப்படுத்தியது.

கொல்லப்பட்டவர்கள் தற்போது அந்தப் பகுதியில் தியாகிகளாகப் போற்றப்படுகிறார்கள். 1950-களில் மௌ மௌ கிளர்ச்சியின் போது சித்திரவதை மற்றும் தவறான நடத்தையால் பாதிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட கென்யர்களுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து நிர்வாகம் 2013-ல் ஒப்புக்கொண்டது.
மட்டுமின்றி, இங்கிலாந்து நிர்வாகம் தங்களது மனமார்ந்த வருத்தங்களைத் தெரிவித்து, சுமார் 20 மில்லியன் பவுண்டுகளை இழப்பீடாக வழங்கியது. தற்போது நைஜீரிய விவகாரத்தில் அப்படியான ஒரு முடிவெடுக்கப்படுமா என்பது, அடுத்துவரும் நாட்களில் தெரிய வரும் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |