ஒரே இரவில் முகத்தை பளிச்சென்று மாற்றும் காபி தூள்- எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், ஒரே இரவில் முகத்தை பளிச்சென்று மாற்றும் காபி தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 4 ஸ்பூன்
- காபி தூள்- 2 ஸ்பூன்
- ஜோஜோபா எண்ணெய்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், காபி தூள் மற்றும் ஜோஜோபா எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்துகொண்டே இருந்தால் ஒரு ஜெல் பதத்திற்கு வருவரை நன்கு கலக்கவும்.

அடுத்து இதனை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின்னர் இதனை கைகளை கொண்டு மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதற்கடுத்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.
இந்த காபி பேக்கை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முகம் நன்கு பளிச்சென்று மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |