ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல், தும்மலை பத்து நிமிஷத்துல குணமாக்க... இதை குடிங்க போதும்
ஜலதோஷம், சளி, மூக்கு ஒழுகுதல், தும்மால் பிரச்சனை ஏற்பட்டால் மிகவும் அசளகரியமான உணர்வு ஏற்படும். இதுபோன்ற பருவநிலை மாற்றங்களால் ஏற்படுகிற உபாதைகளுக்கு வீட்டிலேயே சின்ன சின்ன கைவைத்தியங்களைச் செய்து கொண்டால் போதும்.
அப்படி 10 நிமிடத்தில் ஜலதோஷத்தைப் போக்கக்கூடிய கைவைத்தியம் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி, இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, தேன், ஆப்பிள் சீடர் வினிகர் எலுமிச்சை பழம் மற்றும் தண்ணீர்.
12 வயதில் திருமணம்! 15 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாய்... பல தடைகளை தாண்டி சாதித்த பெண்
நம்முடைய வீடுகளில் எப்போதும் இருக்கும் இந்த சின்ன சின்ன பொருள்களை வைத்தே செலவில்லாமல் உங்களுடைய இருமல் மற்றும் ஜலதோஷத்துக்கான மருந்தை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.
ஒரு நான்கு அங்குலம் அளவுள்ள இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாகக் கழுவவேண்டும். பின்பு தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு அதில் நாம் வைத்திருந்த இஞ்சி துண்டு. இரண்டு இலவங்கப்பட்டை துண்டுகள் மற்றும் இரண்டு நட்சத்திர சோம்பு இவை மூன்றையும் போட்டு ஒரு பத்து நிமிடம் நன்றாகக் கொதிக்கும் வரை சூடு செய்ய வேண்டும்.
பின்பு அதை இறக்கி ஒரு கப்பில் தேவையான அளவு ஊற்றி நன்றாகக் கலக்கி விட வேண்டும். பின்பு 2 மேசைக்கரண்டி தேன் எடுத்து அதில் ஊற்றி நன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியாக அதில் ஒரு பாதி நறுக்கிய எலுமிச்சம்பழத்தை பிழிய வேண்டும். ஜலதோஷத்தைப் போக்கக் கூடிய அற்புதமான நிவாரணி பத்து நிமிடத்தில் தயார்.
எப்படி குடிக்க வேண்டும்?
இந்த பானத்தை சூடாகவும் அல்லது சற்று வெதுவெதுப்பாகவும் கூட குடிக்கலாம். ஆனால், காலையில் தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு, மாலைளோ இரவோ சூடுசெய்து குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஜலதோஷம் இருமல் போன்றவை அதிக குளிர் தன்மையிலேயே வருகின்றது. அதாவது உடலில் உள்ள வெப்பம் உள்ளிருக்கும் குளிர்ந்த சளியை வெளித்தள்ள முயற்சிக்கும் செயல் தான் அது. எனவே முடிந்தவரைக் குளிர்பானங்கள் ஐஸ்கிரீம், மருந்தாகவே ஆனாலும் அதைக் குளிர் செய்து குடிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதமான சூட்டில் அருந்தினால் மிகவும் நல்லது. தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அருந்தி வந்தால்,பொதுவாக ஏழு நாட்கள் வரை இருக்கும் மோசமான ஜலதோஷம் கூட குணமாகிவிடும்.