43 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த காதல்! பிரிந்த காதலனை தேடி சென்று மீண்டும் கரம்பிடித்த மூதாட்டி
கல்லூரி காலத்தில் பிரேக் அப் செய்து கொண்ட காதலர்கள், தற்போது 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பிரிந்த காதலர்கள்
அமெரிக்காவின் வாஷிங்டனில் பெற்றோர்களின் எதிர்ப்பால் கல்லூரி காதலை கைவிட்ட காதலர்கள் தற்போது 43 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
1971ம் ஆண்டு ஜியேனி வாட்ஸ் என்ற பெண்ணும், ஸ்டீபன் வாட்ஸ் என்ற நபரும் தங்கள் இளமையான கல்லூரி காலத்தில் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் ஸ்டீபன் வாட்ஸ் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் ஜியேனி வாட்ஸின் தாய் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜியேனி வாட்ஸ்-க்கும் வேலை கிடைத்ததை தொடர்ந்து, தினமும் நீண்ட தூரம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவே ஜியேனிக்கு நேரம் சரியாக இருந்ததால் இருவருக்கும் இடையிலான இணைப்பு முற்றிலுமாக கரைந்து போகியுள்ளது.
இருப்பினும் காதலனை பிரிந்த சோகம் ஜியேனியின் மனதில் இருந்து வந்துள்ளது, அதே சமயம் காலமும் வேகமாக கடந்து செல்ல ஜியேனி வாட்ஸ் தனது வேலையில் இறுதியில் ஓய்வையும் பெற்றுவிட்டார்.
ஓய்வு காலத்தில் ஜியேனிக்கு மீண்டும் தனது காதலன் ஸ்டீபன் வாட்ஸ் பற்றிய நினைவுகள் தோன்றியுள்ளது, இதையடுத்து தனது கல்லூரி காதலன் பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளார்.
மீண்டும் இணைந்த காதலர்கள்
காதல் முறிவுக்கு பிறகு, ஸ்டீபன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின் அவரையும் விவாகரத்து செய்ததோடு தங்குவதற்கு வீடு இல்லாமல் நர்சிங் ஹோமில் இருப்பதாகவும், அவரது உறவினர்கள் மூலம் ஸ்டீபன் பற்றிய தகவல்களை அறிந்து ஜியேனி கொண்டுள்ளார்.
கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு பிறகு காதலன் ஸ்டீபனை மீண்டும் சந்திப்பதற்காக ஹோமிற்கு ஜியேனி சென்ற போது, ஸ்டீபன் தனது முதல் பார்வையிலேயே ஜியேனியை அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.
தங்களது மறு சந்திப்பு குறித்து இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொண்டனர். அதன்படி இருவருக்கும் கடந்த அக்டோபரில் திருமணம் நடைபெற்றுள்ளது.
சுமார் 43 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்றாக இணைந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னுடைய கணவன் முன்பு போலவே தன்னை காதலிப்பதாக ஜியேன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.