2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! 36 பேர் பலி: பதற வைக்கும் காட்சிகள்
பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சிந்து மாகாணத்தில் உள்ள கோட்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.
விபத்துக்குள்ளான ரயில்களில் ஒன்றான மில்லட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு சர் சையத் எக்ஸ்பிரஸ் மீது மோதியதாக பொலிஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் தற்போது வரை 36 பேர் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
விபத்தை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் சடலங்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
Pakistan: At least 30 killed as two trains collided in Ghotki in Pakistan's Sindh Province. Accident happened as Sir Syed Express train hit the Millat Express which had derailed.#pakistantrainaccident #TrainAccident #GhotkiTrainAccident #accidentpic.twitter.com/LkjMoEomYy
— Annu Kaushik (@AnnuKaushik253) June 7, 2021
விபத்தை தொடர்ந்து அப்பாதையில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படதற்கான காரணம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Train accident near ghotki pic.twitter.com/mPDMIhz4Wa
— Kamil Arif (@CrkamilArif) June 7, 2021
மருத்துவமனையில் பலர் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.