போப் பிரான்சிஸூக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை!
கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸூக்கு (84 வயது) பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இந்தத் தகவலை வாடிகன் செய்தித் தொடர்பாளர் மட்டீயோ புரூனி தெரிவித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் என கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு பெருங்குடலில் பிரச்னை இருந்தது கண்டறியப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சை ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றிய போப் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக பொதுமக்களுக்கு தனது ஆசிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.