ஆப்கானிஸ்தான் சொத்துகள் தொடர்பில் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்த ரஷ்ய ஜனாதிபதி புதின்
ஆப்கானிஸ்தான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புதின் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் உலக நாடுகள் பலவும் ஆப்கனுடனான பொருளாதார உறவைத் துண்டித்துள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானின் சொத்துகளை முடக்கி வைத்து நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 21வது கூட்டம் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் அந்த நாட்டு ஜனாதிபதி இமோமலி ரஹ்மோன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
கொரோனாவால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி புதின் காணொலி வாயிலாகவே இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய புதின்,
ஆப்கானிஸ்தான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மன்றம், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மட்டுமின்றி, தாலிபான்களுடன் செயல்படுவது குறித்து ரஷ்யாவும் பரிசீலித்து வருகிறது என்று கூறியுள்ளார்.