ஜேர்மன் முன்னாள் சேன்சலர் தொடர்பில் உருவாகியுள்ள சர்ச்சை
ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தொடர்பில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
முன்னாள் சேன்சலருக்கு ஏராளம் சலுகைகள்
ஜேர்மனியின் முன்னாள் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கு எட்டு உதவியாளர்களுடன், தனியாக ஒரு அலுவலகமும் ஒதுக்கப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எதிர்கட்சிகள் ஷோல்ஸுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால், ஜேர்மனியைப் பொருத்தவரை முன்னாள் சேன்ஸலர்களுக்கு இதுபோல அலுவலகமும் உதவியாளர்களும் கொடுக்கப்படுவது வழக்கம்தான்.
ஏனென்றால், அவர்கள் சேன்ஸலர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், வீட்டில் சும்மா உட்காருவதில்லை.
ஷோல்சைப் பொருத்தவரை, போர்ச்சூழலுக்கு மத்தியில் தங்கள் துறையில் அவருடைய பங்களிப்பு அத்தியாவசியம் என்கிறது ஜேர்மன் நிதி அமைச்சகம்.
ஆக, ஷோல்ஸின் பங்களிப்பு அரசுக்கு தேவைப்படுகிறது என்பதாலேயே அவருக்கு இவ்வளவு சலுகைகள் அளிக்கப்படுகிறது, அது முறையானதே என சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸும் கருதுகிறார் என்கிறார் அரசின் செய்தித்தொடர்பாளரான ஸ்டீபன் (Stefan Kornelius).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |