பாதுகாப்பு செலவுகளை கடுமையாக உயர்த்திய ஜேர்மனி - பிரித்தானியா, பிரான்ஸை விட வேகம்
பிரித்தானியா அல்லது பிரான்ஸை விட ஜேர்மனி பாதுகாப்பு செலவினங்களை வேகமாக அதிகரிக்க உள்ளது.
ஜேர்மனி, 2029-ஆம் ஆண்டுக்குள் தனது பாதுகாப்பு செலவுகளை 95 பில்லியன் யூரோவிலிருந்து 162 பில்லியன் யூரோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இது பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளை விட வேகமான பாதுகாப்பு வளர்ச்சி எனும் வகையில் முக்கிய மாற்றமாகும்.
புதிய பட்ஜெட் திட்டங்களை வெளியிட்ட நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெயில், "ரஷ்யாவின் மீண்டும் ஆயுதப்படை திரட்டும் முயற்சிக்கு எதிராக நாங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கடமை" என கூறியுள்ளார்.
இந்த செலவில் வருடத்திற்கு 8.5 பில்லியன் யூரோ உக்ரைனுக்கான இராணுவ உதவி அடங்கும். இதன்மூலம் 2025-ல் 2.4 சதவீதமாக இருந்த ஜேர்மனியின் பாதுகாப்பு செலவு, 2029-ல் 3.5 சதவீத GDP-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 5 சதவீத பாதுகாப்பு செலவு இலக்கை ஆதரிக்க NATO கூட்டமைப்பில் பெரும்பாலான நாடுகள் ஒப்புதல் அளிக்க உள்ளன.
இதற்கிடையில் பிரான்ஸ் தனது பாதுகாப்பு செலவை 2030-க்குள் 3.5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பிரித்தானியா 2027-ல் 2.6 சதவீதம், 2029-க்குப் பிறகு 3 சதவீதம் என்ற இலக்கை முன்வைத்துள்ளது.
ஜேர்மனி இந்த செலவுகளை அரசியல் கடன் வரம்பை தளர்த்தி, 1 டிரில்லியன் யூரோ வரை கடனெடுத்து, பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடுகிறது.
மேலும், 46 பில்லியன் யூரோ வரிப்பயன்கள், 115 பில்லியன் யூரோ கட்டமைப்பு முதலீடுகள், 500 பில்லியன் யூரோ சிறப்பு நிதி திட்டம் ஆகியன மூலம், ஜேர்மனியின் பொருளாதாரத்தை புத்துயிர்ப்பிக்க ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அரசு முனைவில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |