பட்டப்பகலில் நடந்த சம்பவம்... கலவர பூமியான டப்ளின் நகரம்: பொலிஸ் வாகனங்கள் தீக்கிரை
டப்ளின் பள்ளிக் கத்திக்குத்து சம்பவம் நடந்த இடத்தில் டஹ்ற்போது கலவரம் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் வாகனம் தீக்கிரை
அயர்லாந்து தலைநகரில் ஐவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, வெடித்த கலவரத்தில் பொலிஸ் வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பேருந்து ஒன்றும், கட்டிடங்களுக்கும் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது.
Credit: Collins
கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பொலிசார் கடுமையாக போராடி வருகின்றனர். டப்ளின் பாடசாலை கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் தவறான தகவல் சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்தே கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பெண் ஒருவர் ஆபத்தான நிலையில்
டப்ளின் நகரில் அமைந்துள்ள Gaelscoil Choláiste Mhuire பாடசாலை அருகே மதிய நேரம் நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
Credit: Collins
காயமடைந்தவர்களில் 30 வயது கடந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்ததாகவும், அது தற்போது கலவரமாக வெடித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |