வங்கி கணக்கில் சம்பளத்துடன் சேர்ந்து விழுந்த பல கோடி பணம்! திக்குமுக்காடி போன நபர்
காவலரின் வங்கிக்கணக்கில் திடீரென வந்து விழுந்த 100 மில்லியன் பணம்.
பிறகு அவருக்கு காத்திருந்த ட்விஸ்ட்.
பாகிஸ்தானில் சாதாரண சம்பளத்தில் வேலை செய்யும் காவலர் வங்கி கணக்கில் திடீரென 100 மில்லியன் பணம் விழுந்த நிலையில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்.
ஆனால் அவரின் மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை என்பது தான் இதில் பெரிய ட்விஸ்ட்.
கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஆமீர் கோபங். இவரது வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் இருந்து 100 மில்லியன் பணம் விழுந்து உள்ளது.
ஆனால், இதனை பற்றி அவர் அறியவில்லை. திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம், உங்களது வங்கி கணக்கில் 100 மில்லியன் பணம் விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Representational Image
இதனால், மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார். இதுபற்றி கோபங் கூறும்போது, இவ்வளவு பணம் எனக்கு கிடைத்து இருக்கிறது என பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஏனெனில், எனது கணக்கில் இதுவரை சில ஆயிரங்களை தவிர வேறு எதனையும் நான் பார்த்தது இல்லை என கூறியுள்ளார். எனினும், அவரது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.
உடனடியாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்பு, கோபங் ஏதேனும் செயல்படுவதற்கு முன் வங்கி அதிரடியாக அவரது கணக்கை முடக்கியது. அவரது ஏ.டி.எம். அட்டையையும் பணம் எடுக்க முடியாதபடிக்கு முடக்கி விட்டது.
அவரின் வங்கி கணக்கில் எப்படி, எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என விசாரணை தொடங்கியுள்ளது.