கொரோனாவின் 4-வது அலையில் சிக்கிய பிரபல நாடு! மருத்துவமனையில் குவியும் மக்கள்: எச்சரிக்கை செய்தி
கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையே தாங்கமுடியாமல் பல நாடுகள் தவித்து வரும் நிலையில், நான்காவது அலையால் பிரபல நாடு கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, பல லட்சம் உயிர்களை எடுத்து வருகிறது.
ஆரம்ப காலகட்டத்தில், இருந்த கொரோனா வைரஸ், இப்போது உருமாறி வெவ்வேறு விதமாக மக்களிடையே பரவுவதால், இதைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன.
தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இப்போது பரவும் கொரோனாவை இந்த தடுப்பூசிகள் கட்டுப்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜப்பானில் கொரோனாவின் நான்காவது அலை தாக்கி வருவதாகவும், இதனால் அங்கிருக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஜப்பானில் கொரோனாவின் 4-ஆம் அலை காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது. டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.
இதன் காரணமாக தீவிரத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சமீப நாட்களாக கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல பகுதிகளில் அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், ஜப்பானில் 4,093 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பானில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலையையே ஒரு சில நாடுகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை, இதில் 4-வது அலையால் பாதிக்கப்பட்டால், மக்கள் பெரும் எச்சரிக்கையுடன், இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.