ஐரோப்பாவில் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும்? உலக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்
ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரவிருப்பதாக உலக சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் புதிய உச்சத்தை அடைந்து வருகின்றது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் கொரோனா வேகமாக பரவ Omicron தான் முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து உருமாறிய Omicron வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில் ஐரோப்பாவில் எப்போது கொரோனா முடிவுக்கு வரும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் கேன்ஸ் கிளச் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது, Omicron அலை தணிந்தவுடன் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும். இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் கொரோனாவின் முடிவை எதிர்நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக கேன்ஸ் கிளச் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் தடுப்பூசி ஆற்றலாக இருக்கலாம்.
Omicron வகை கொரோனா மார்ச் மாதத்திற்குள் 60% பேருக்கு பரவ வாய்ப்புள்ளது. மக்களுக்கு நோய் எதிர்ப்பு அதிகரிப்பதால் தொற்று பாதிப்பு இயற்கையாகவே குறைய கூடும்.
டெல்டா வகை கொரோனாவை விட Omicron வகை தொற்றின் பாதிப்பு குறைவாக இருந்தாலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.