மக்களே பாதுகாப்பாக இருங்கள்! சென்னையில் 2000... தமிழகத்தில் 6000-ஐ நெருங்கியது கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 10ம் திகதி இன்றுடன் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது.
நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதேபோல், பொது இடங்களில் எச்சில் துப்பினால் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,989 ஆக அதிகரித்துள்ளது, 23 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை புதிதாக 1,977 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள கட்டுப்பாடுகளால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாவிட்டால் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள குறிப்பிடத்தக்கது.