எவரெஸ்ட் சிகரம் வரை சென்ற கொரோனா வைரஸ்!
எவரெஸ்ட் மலை உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்த மலையேறும் வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் நேபாளத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் எவரெஸ்ட் மலைச் சிகரத்தை அடைய உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மலையேறும் விரர்கள் வருவார்கள். தற்போது அதற்கான சீஸனும் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு மலை ஏறுவதற்ககு 377 பேருக்கு நேபால் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு ஏற்றார் போல் அந்நாட்டில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் மலையேற்றதத்துக்கு பலரும் வந்தவண்ணம் இருந்தனர்.
அனால் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நார்வே நாட்டு வீரருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த Erlend Ness எனும் அந்த நபர் பனிச்சறுக்குகளில் ஏறிக்கொண்டிருந்தபோது அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
அதனால் அவர் உடனடியாக எவரெஸ்ட் பேஸ் கெம்ப்பில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அவருடை குழுவில் இருந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ள மற்ற அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், மலையேற்றத்துக்கு தடை விதிக்கும் அளவிற்கு இதுவரை எந்த பாதிப்பும் பதிவாகவில்லை என நேபாள சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.