கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி; வெளியான ஆச்சரியமான ஆய்வு முடிவு!
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கர்ப்ப காலங்களில் கூட பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள Massachusetts பொது மருத்துவமனை, Brigham மற்றும் மகளிர் மருத்துவமனை மற்றும் Ragon Institute of MGH, MIT மற்றும் Harvard ஆகியவற்றின் வல்லுநர்கள் American Journal of Obstetrics and Gynecology மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.
மாடர்னா அல்லது ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 131 பெண்களுக்கு செலுத்தப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் தகவல்களை சேகரித்துள்ளனர்.
இந்த 131 பேரில் 84 பெண்கள் கர்ப்பமாக உள்ளனர், 31 பேர் பாலூட்டுகின்றனர், 16 பேர் கர்ப்பமாகாத இளம் பெண்கள் உள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் டிசம்பர் 17, 2020 முதல் மார்ச் 02, 2021 வரை தரவுகளை சேகரித்தனர்.
எல்லா பெண்களிலும், தடுப்பூசியால் தூண்டப்பட்ட ஆன்டிபாடி அளவுகள் ஒரே மாதிரியாக இருந்தன.
"இந்த தடுப்பூசிகள் இந்த பெண்களின் உடலில் நம்பமுடியாத அளவிற்கு திறம்பட செயல்படுவதாக தெரிகிறது" என்று Ragon நிறுவனத்தின் மருத்துவ பேராசிரியர் Galit Alter கூறினார்.
பாலூட்டும் பெண்கள் தங்கள் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலமும், கர்ப்பிணி பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்திகளுக்கு நஞ்சுக்கொடி மூலமும் பாதுகாப்பு ஆன்டிபாடிகளை அனுப்பியதையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.
இருப்பினும், புதிதாகப் பிறந்த குழந்தைகளில் இந்த பாதுகாப்பு ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒப்பிடுகையில் ஆன்டிபாடி அளவுகள் "குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தன" என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான நோய் மற்றும் பாதகமான விளைவுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாக Centers for Disease Control and Prevention (CDC) எச்சரிக்கிறது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் கிட்டத்தட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானதா என்பதை ஆராய CDC முடிவெடுத்துள்ளது.
"இது ஒரு அவசர தேவை, ஏனென்றால் இந்த தடுப்பூசி முயற்சியில் நாங்கள் ஒருவரை மட்டும் பாதுகாப்பதில்லை, ஒரே நேரத்தில் இரண்டு பேரைப் பாதுகாக்கிறோம்," என்று Galit Alter கூறினார்.

