ஆபத்தை நோக்கி ஐரோப்பிய நாடுகள்! 5 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு.. உலக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவை தடுக்காவிட்டால் மார்ச் மாதத்திற்குள் 5 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா முதல் அலையின் போது, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளில் மக்களின் பலருக்கு போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதது, பல நாடுகளில் புதிய டெல்டா திரிபு பரவியது போன்றவை தான் இந்த கொரோனா பரவலுக்குப் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிப்பது, அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது, புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை செயல்படுத்துவது போன்றவை உதவும் எனவும் மருத்துவர் க்ளூக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உலக சுகாதாரத்துறை ஐரோப்பிய நாட்டில் கொரோனா பரவலை தடுக்காவிட்டால் மார்ச் மாதத்திற்குள் 5 லட்சம் பலியாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.