கொரோனா வைரஸ் வருகிறது! 2013-ஆம் ஆண்டே கூறிய இளைஞன்: ஆதாரத்துடன் வைரலாகும் புகைப்படம்
கொரோனா வைரஸ் வருகிறது என்று 2013-ஆம் ஆண்டு இளைஞன், ஒருவர் போட்ட டுவிட்டர் பதிவு இப்போது இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால் இப்போது கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் மனிதர்களிடமிருந்து எளிதாக பரவுவதால், இதைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் இதற்கு நிரந்தர தீர்வு தடுப்பூசி என்பதால், கொரோனா பரவல் உள்ள நாடுகள் பெரும்பாலும் தடுப்பூசி போட ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு @Marco_Acortes என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், Corona virus....its coming என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதைக் கண்ட மக்கள் எப்படி இவரால் கூற முடிந்தது? இவர் இப்போது எங்கிருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், இவர் டுவிட்டர் பக்கத்தை பார்த்தால், கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பின் இவர் ஒரு பதிவும் போடவில்லை, இதனால் இவர் என்ன ஆனார் என்பது குறித்து தெரியவில்லை.
Corona virus....its coming
— Marco (@Marco_Acortes) June 3, 2013