25000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் இவர்களை தாக்கியுள்ளது! அது தான் மரணம் குறைவுக்கு காரணமாம்
உலகையே இப்போது ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் 25000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவை தாக்கியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டின் துவக்கத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது கோடிக்கணக்கானோரின் உயிர்களை பலிவாங்கியுள்ளது.
இந்த வைரஸை தடுப்பதற்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு போடப்பட்டும் வருகிறது.
இருப்பினும், தடுப்பூசியால் கடும் விளைவு ஏற்படுவதாகவும், ஒரு சில நாடுகளில் புதிய பரிமாற்றத்தில் உருவாகியுள்ள கொரோனாவை இந்த தடுப்பூசி தடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில், பரிணாம மரபியலாளர்கள்(Evolutionary geneticists) ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை கண்டுபிடித்துள்ளனர்.
அதில், அவர்கள் கொரோனா நோய்தொற்றின் இறக்கு விகிதம், கிழக்கு ஆசியாவில் ஏன் குறைவாக இருக்கிறது என்பதையும் அறிந்துள்ளனர்.
அவர்கள், இந்த கொரோனா வைரஸ் கிழக்கு ஆசியாவில் சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்திருக்கலாம் என்றும், அது இப்போதுடைய மக்களிடம் இருக்கும் டி.என்.ஏவியில் மாறியிருக்கலாம் என்று நம்புகின்றனர்.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கிழக்கு ஆசியாவில் இருப்பவர்கள் இந்த நோயை எதிர்த்து போராடும் தன்மையை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
Tucson-ல் உள்ள University of Arizona பல்கலைக்கழகத்தின் பரிணாம மரபியலாளர் David Enard, கடந்த வாரம் அமெரிக்க இயற்பியல் மானுடவியலாளர்கள் சங்கத்தின் மெய்நிகர் வருடாந்திர கூட்டத்தில் இந்த கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், அவர் சீனா, வியட்நாமிய கின் மற்றும் ஆப்பிரிக்க யோருப்பா மக்கள் உட்பட ஐந்து கண்டங்களில் உள்ள 26 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 2,504 பேரின் பொதுவில் கிடைக்கக்கூடிய டி.என்.ஏவை தங்களின் ஆராய்ச்சி குழு ஆய்வுபடுத்தியது.
அதன் பகுப்பாய்வில், 420 பேருக்கு இந்த கொரோனாவை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதை அறிய முடிந்தது. அவர்களின் புரதங்களை வைத்து அடையாளம் கண்டால், அது 25000 ஆண்டுகளுக்கு முன்பே தாக்கியுள்ளது என்பதை அறியமுடிகிறது.
அதிலும் அந்த எதிர்ப்பு சக்தி கொண்டவர்களும் கிழக்கு ஆசியயர்கள் மட்டுமே என்பது தான் ஆச்சரியம். David Enard தொடர்ந்து கூறுகையில், இந்த ஆய்வில், குறித்த வைரஸ் ஆரம்பத்தில் தீவிரமாக இருந்துள்ளது. அதன் பின் அவர்கள் மரபணுவுடன் ஒத்துப் போகிறது.
இந்த வைரஸ் ஆரம்பத்தில் பரவி, காலப்போக்கில் குறைந்து போயுள்ளது. இந்த வைரஸால் அப்போது கிழக்கு ஆசியர்கள் பாதிக்கப்பட்டு, அதை எதிர்க்கும் திறனை பெற்றுள்ளனர்.
அது மரபணுவில் தெரிகிறது. கொரோனா வைரஸ்கள் நோயை ஏற்படுத்தும் வைரஸ்களின் குடும்பமாகும், அவற்றில் ஏழு வெவ்வேறு வகைகள் மனிதர்களிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆய்வில் 42 மரபணு வகைகளில் 21 கொரோனா வைரஸ்கள் மட்டுமல்லாமல், பரந்த அளவிலான வைரஸ்களின் விளைவுகளை மேம்படுத்தவோ அல்லது தடுக்கவோ செயல்படுகின்றன.
கொரோனா வைரஸ்கள் போன்ற புரதங்களை சுரண்டுவதற்கு அறியப்படாத ஒரு வைரஸ் பண்டைய ஆசிய தொற்றுநோயைத் தூண்டியிருக்கலாம் என்று அவர் விளக்கியுள்ளார்.
இந்த ஆய்வில் ஈடுபடாத பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டின் பரிணாம மரபியலாளர் லூயிஸ் குயின்டனா முர்சி, கிழக்கு ஆசியர்கள் நீண்ட காலமாக கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், இதனால் அவர்களின் மரபணு இந்த தொற்று நோயை எதிர்ப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த பண்டைய மரபணு மாற்றங்கள் தற்போதைய தொற்றுநோய்க்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது.
இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு விகிதங்களை குறைக்க பங்களிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.