சடலத்தை தபால் நிலையம் இழுத்துச் சென்ற விவகாரம்: புகைப்படத்துடன் வெளியான புதிய தகவல்
அயர்லாந்தில் ஓய்வூதியத்தை பெறும் முயற்சியில், இறந்துபோன தமது உறவினரின் சடலத்தை தபால் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற நபர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விவகாரத்தில் அடையாளம் காணப்பட்ட 40 வயது Declan Haughney தெரிவிக்கையில், மரணமடைந்த தமது உறவினரின் பணத்தை கொள்ளையிட தாம் முயற்சிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.
அந்த சம்பவத்திற்கு பின்னர் தாம் மொத்த நகரமே விவாதிக்கும் நபராக மாறியதாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு 66 வயதான தமது உறவினரை கொலை செய்துள்ளதாகவும் மக்கள் பேசிக்கொள்வதாக Declan Haughney தெரிவித்துள்ளார்.
40 வயதான தாம் எதற்கு இறந்தவரின் பணத்தை கொள்ளையிட வேண்டும், உண்மையில் எனக்கு அப்படியான பணம் தேவையே இல்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்கு போதை மருந்து பழக்கம் இருப்பது உண்மை தான் என குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக சிறைக்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கும் அவர், எனது கடந்த காலத்தை குறிப்பிட்டே மக்கள் என்னை இழிவாக பேசுகிறார்கள் என்றார்.
கடந்த 3 வருடங்களாக திருந்தி வாழ்பவன் நான். மேலும், தபால் நிலையத்திற்கு தமது உறவினரின் சடலத்தை இழுத்து சென்றது உண்மைதான், ஆனால் அவர் உயிருடன் இருந்தபோது தான் அது நடந்தது, தபால் நிலையம் சென்று சேரும் முன்னர் அவர் இறந்திருக்கலாம் என்றே தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தின் கார்லோ நகரத்தில் உள்ள Hosey's தபால் நிலையத்திலே வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் தபால் நிலைய ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, விசாரிக்க தொடங்கியபோது,
இருவரும் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த வினோதமான சம்பவம் ஐரிஷ் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.