இளவரசர் ஹரி மேகன் பட்டங்களைப் பறித்தால்... ராஜ குடும்ப நிபுணர் பரபரப்பு தகவல்
ராஜ குடும்பத்தை அவமதிக்கும் வகையில் இளவரசர் ஹரி மேகன் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடரைத் தொடர்ந்து, அவர்களுடைய பட்டங்களைப் பறிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
ராஜ குடும்பத்தின் மீது சரமாரி குற்றச்சாட்டுகள்
முதலில் ஹரியும் மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் ராஜ குடும்பத்தின்மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.
இன்று ஹரி மேகனுடைய நெட்ப்ளிக்ஸ் தொடரின் முதல் மூன்று எபிசோடுகள் வெளியாகின்றன.
அடுத்ததாக, ஹரியுடைய 'Spare' என்னும் புத்தகம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வெளியாகிறது.
ஆக, தொடர்ந்து ராஜ குடும்பத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள், ஹரியும் மேகனும்.
Credit: Getty
இளவரசர் ஹரி மேகன் பட்டங்களைப் பறிக்க முடியுமா?
இப்படி ராஜ குடும்பத்தின் மீது ஹரி மேகன் தம்பதியர் சேற்றை வாரி இறைத்துவரும்நிலையில், அவர்களுடைய பட்டங்களை பறிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
ஹரி, மேகனைத் திருமணம் செய்தபோது, மகாராணி இரண்டாம் எலிசபெத், தம்பதியருக்கு His Royal Highness The Duke of Sussex, Earl of Dumbarton, and Baron Kilkeel மற்றும் Her Royal Highness The Duchess of Sussex என்னும் பட்டங்களை வழங்கினார்.
ஆகவே, மகாராணியார் வழங்கிய பட்டங்களைப் பறிக்கமுடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மன்னர் என்ன நடவடிக்கை எடுப்பார்?
இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் மேகனுடைய பட்டங்களைப் பறிக்கமுடியுமா என்ற விடயம் தொடர்பில், ராஜ குடும்ப நிபுணரான Angela Levin என்பவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, மகாராணியார் ஹரி மேகன் தம்பதிக்கு வழங்கிய பட்டங்களை பறிக்கமுடியாது என்று கூறமுடியாது என்கிறார் அவர். அதாவது பறிக்க முடியும் என்பது அதன் பொருள்.
ஆனால், அப்படி அவர்களுடைய பட்டங்களைப் பறித்தால், பிர்ச்சினைகள் இன்னும் பெரிதாக வாய்ப்புள்ளது. ஹரியும் மேகனும் தங்கள் பட்டங்கள் பறிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். அப்படி செல்லும் பட்சத்தில், யாரோ ஒரு நீதிபதி, அவர்களுடைய பட்டங்களைப் பறிக்கமுடியாது என்று தீர்ப்பளிக்கலாம்.
அதைவிட பெரிய ஒரு பிரச்சினை உள்ளது.
அது என்னவென்றால், ஹரி, அரியணை ஏறும் ராஜ குடும்பத்தினர் வரிசையில் இருக்கிறார். ஆகவே, அவரது பட்டங்களைப் பறிப்பதால் அரசியல் சாசன சிக்கல்கள் உருவாகக்கூடும்.
ஆகவே, இப்போதைக்கு மன்னர் சார்லஸ் அதிரடி நடவடிகை எதுவும் எடுக்காமல், ஹரியின் புத்தகமான 'Spare' வெளியாகும் வரை காத்திருப்பார் என கருதப்படுகிறது.
இந்த நெட்ப்ளிக்ஸ் தொடர் மற்றும் அந்த புத்தகத்தில் வருங்கால மன்னரான வில்லியமுடைய மனைவி கேட் என்னும் கேத்தரின் குறித்து ஏதாவது அவதூறு இடபெறுமா என பார்ப்பதற்காக ராஜ குடும்பத்தினர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதைப் பொறுத்தே மன்னரின் நடவடிக்கை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Credit: UNPIXS