உக்ரைனுக்கு அடுத்து ரஷ்யா தாக்க திட்டமிட்டுள்ள நாடுகள்: பெல்ஜியம் ராணுவ தளபதி கணிப்பு
உக்ரைனுக்கு அடுத்தபடியாக, மால்டோவா மற்றும் பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறியுள்ளார் பெல்ஜியம் ராணுவத் தலைவர்.
ஐரோப்பா தன்னைக் காத்துக்கொள்ள தயாராகவேண்டும்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய பேச்சுக்கு எப்போதுமே பல அர்த்தங்கள் இருக்கும் என்று கூறியுள்ள பெல்ஜியம் ராணுவத் தலைவரான Michel Hofman, உக்ரைனுக்கு அடுத்தபடியாக, மால்டோவா மற்றும் பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
ரஷ்யா தனது அண்டை நாட்டைத் தாக்கும் ஆசை கொண்டது என்பதை அந்நாடு ஏற்கனவே நிரூபித்துக்காட்டியுள்ளது என்று கூறிய Michel Hofman, ரஷ்யர்களுக்கு திடீரென்று புதிது புதிதாக ஐடியாக்கள் வரும் என்றும், ஆகவே, ரஷ்யா அடுத்து தெற்கேயுள்ள மால்டோவாவையோ அல்லது பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா அல்லது லிதுவேனியா முதலான நாடுகளையோ தாக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, ஐரோப்பா தன்னை பாதுகாத்துக்கொள்ள உடனடியாக தயாராகவேண்டும், தன்னைக் காத்துக்கொள்ள ஐரோப்பாவால் முடியும் என்பதை அது தெளிவுபடுத்தியாகவேண்டும் என்று கூறியுள்ள Michel Hofman, தேவைப்பட்டால் ஐரோப்பா திருப்பித் தாக்கவும் செய்யும் என்பதையும் அது தெளிவுபடுத்தியாகவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது ரஷ்யாவின் ராணுவம் வலுவிழந்துள்ளது உண்மைதான் என்று கூறிய Michel Hofman, ஆனால், அது தற்காலிகமானதுதான் என்றும், ரஷ்யா போரில் வெற்றிபெறுமானால், அது தனது போர் இயந்திரத்தை மீண்டும் உருவாக்கி, தனது ராணுவத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |